தமிழகத்தில் 24 வயது இளைஞருக்கு கொரோனா! திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 27 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நேற்றுவரை  26 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நபராக பாதிக்கப்பட்ட டெல்லியில் இருந்து வந்த இளைஞர் சிகிச்சையின் பலன் அளித்து மீண்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா மேலும் ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டை சார்ந்த அந்த  நபருக்கு திருச்சி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

another one foreign return tested corona positive


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->