மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - விரிவுரையாளரை வெளுத்து வாங்கிய 16 மாணவர்கள் சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - விரிவுரையாளரை வெளுத்து வாங்கிய 16 மாணவர்கள் சஸ்பெண்ட்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக வினோத் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், வினோத் குமார் கலோரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

இதையறிந்த கல்லூரி மாணவர்கள் வினோத்குமாரை சரமாரியாக தாக்கி கல்லூரியில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதையறிந்த கல்லூரி முதல்வர் 16 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதில் கல்லூரி முதல்வர் மாரியம்மாள், "கல்லூரி விரிவுரையாளர் வினோத் குமாரை தாக்கிய போது கல்லூரியில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதால் மாணவர்கள் 16 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடபட்டுள்ளது. இதனால் மாணவிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 students suspend for attack lecturer in trichy lalkudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->