காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்கள் தொடர்பு கொள்ள...?
Tamil Nadu students studying in Kashmir should contact
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் அறவே முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதைத்தொடர்ந்து எல்லை பகுதியிலுள்ள மக்கள் குறித்து உறவினர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, 'கல்வி பயில காஷ்மீருக்கு சென்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்று தெரிவித்துள்ளது.
மேலும், உதவி தேவைப்படும் மாணவர்கள் 75503 31902 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ 80690 09901, 80690 09900 என்ற டோல்-ஃப்ரீ எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். nrtwb.chairman@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu students studying in Kashmir should contact