தெலுங்கு சினிமாவில் படத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்.!அனிருத் பற்றி தமன் ஆதங்கம்! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன், இசையமைப்பாளர் அனிருத்தை குறித்து பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய பேட்டியில் பேசிய தமன், தெலுங்கு சினிமாவில் பலர் படத்தின் தரத்திற்காக அல்ல, பணத்திற்காகவே வேலை செய்ய வருவதாகவும், அதனை தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

இதனுடன் ஒப்பிட்டு, தமிழ்த் திரையுலகத்தில் அதிக ஒற்றுமை இருப்பதாகவும், பிறமொழி கலைஞர்களை எளிதில் அனுமதிக்காத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பேச்சின் போது, அனிருத்துக்கு தெலுங்கு சினிமாவில் எளிதாக வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆனால் அவர் படத்திற்காக இசையமைக்காமல் பணத்திற்காகவே வேலை செய்கிறார் என்பதுபோன்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்தக் கருத்து அனிருத் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தின் வெற்றிக்கு உழைப்பு மற்றும் திறமைதான் காரணம் என்றும், தமனின் பேச்சு தேவையற்றது என்றும் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Telugu cinema they work not for the film but for money and fame Thaman is worried about Anirudh


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->