கருணாநிதி பேரன் ஆட்டத்துல உண்டா.? இல்லையா.? ஆசிர்வாதம் வாங்கிய கே என் நேரு அதிரடி.! - Seithipunal
Seithipunal


அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை கருணாநிதியின் குடும்பத்தில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டிலேயே திமுக இருப்பதாகவும், கருணாநிதியின் குடும்ப சொத்தாக திராவிட முன்னேற்றக் கழகம் மாறிவிட்டதாக விமர்சனங்கள் தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டு வருகிறது.

விமர்சனங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சமீபத்தில் அவருடைய மகனான உதயநிதியை திமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நேரடியாக இளைஞரணி செயலாளராக நியமித்து இருந்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. 

இதே போல் தான் கருணாநிதி மகனான மு க ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பதவி உயர்த்திய போதும், வாரிசு அரசியல் என்ற கடும் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால் அப்போது திமுகவை சேர்ந்தவர்கள், இளமைப்பருவம் முதலே மு க ஸ்டாலின் கட்சிக்காக பணியாற்றினார். அவருக்கு இந்த பதவி உரித்தானது என்பது போன்ற விளக்கங்களை கொடுத்து சமாளித்தனர்.

ஆனால் தற்போது இரண்டாவது தலைமுறையாக கருணாநிதியின் பேரன் உதயநிதி தற்போது இளைஞரணி செயலாளர் பதவி அளிப்பது திமுகவின் குடும்ப அரசியலுக்கு கோடி விளக்கங்கள் கொடுத்தாலும், இந்த விமர்சனங்களைக் இனி தடுக்கவே முடியாது.

வரும் சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவது, கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே உறுதியாகிவிட்டது.  திமுகவின் தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பேன் என்று உதயநிதியும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சம்மதத்தை தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், உதயநிதி வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திமுகவினர் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், திமுக சார்ந்த ஊடகங்கள் மூலமாகவும் ஒரு செய்தி பொய்யாக பரப்பப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என்று பிரேக்கிங் நியூஸ் போடுமளவுக்கு பரப்பப்பட்டது.

திமுகவின் தலைமை ஒரு விளம்பரத்திற்காக ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டு இருந்தாலும் இதனை தமிழகத்தில் யாரும் நம்பப் போவதில்லை. உதயநிதி தேர்தலில் போட்டியிடுவாரா., மாட்டாரா., என்ற ஒரு பரபரப்பை உண்டாக்க வேண்டும் என்று தெரிந்த திமுகவுக்கு இதனை எப்படி முடிக்க வேண்டும் என்று கூடவா தெரியாது.

அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் திமுகவின் மூத்த தலைவர்களான ஆர்எஸ் பாரதியும் மற்றும் உதயநிதியிடம் தனது பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்கிய 70 வயது கே என் நேருவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராமர் கோவில், தபால் வாக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து பேசினார்கள். பின்னர் உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்பதையும் வெளியான பொய்யான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin in 2021 election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->