உயரிய கவுரவம்...! 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழருக்கு கிடைத்த ஞானபீட விருது...! - வைரமுத்துவுக்கு பாராட்டு - Seithipunal
Seithipunal


இந்திய இலக்கிய உலகில் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டுக்காக பிரபலக் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்திற்கு அவர் வழங்கிய நீண்டகாலப் படைப்பாற்றல் மற்றும் செழுமையான பங்களிப்பை பாராட்டி இந்த பெருமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1975ஆம் ஆண்டு அகிலன் மற்றும் 2002ஆம் ஆண்டு ஜெயகாந்தன் ஆகிய தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழருக்கு இந்த பெருமை கிடைத்திருப்பது தமிழ் இலக்கிய உலகில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விருது அறிவிப்பு வெளியானதையடுத்து, இலக்கிய ஆளுமைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கவிஞர் வைரமுத்துவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jnanpith Award received by Tamilian after 24 years Congratulations Vairamuthu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->