மீண்டும் தனது கோர முகத்தை வெளிப்படுத்திய கரோனா.. ஒரேநாளில் துடிதுடித்து உயிரிழந்த மக்கள்.!!
in china corona virus died peoples
சீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில், கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதலாக பரவிய கரோனா வைரஸ் உலகம் நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கமானது அசுர வேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது.
தற்போதுவரை சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டினை மையமாக கொண்டு பரவிவந்த நிலையில், உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், நேற்றைய தினத்தின் நிலவரப்படி சுமார் 1,400 பேர் வைரஸ் பாதிப்பின் காரணமாக பலியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்திருந்தந்து.
இந்த நிலையில், சுமார் 143 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் சுமார் 1,523 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 143 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வரை சுமார் 16,840 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது சுமார் 66,492 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹூபேய் நகரில் சுமார் 33,693 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in china corona virus died peoples