ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து!
CBSE Cancels Class 12 Board Exams in Middle East Due to Regional Security Crisis
மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ (CBSE) 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்படும் நாடுகள்:
வளைகுடா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட நாடுகளில் இந்த ரத்து நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது:
பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE).
முக்கியத் தகவல்கள்:
காலவரம்பு: மார்ச் 16 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பாடங்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முந்தைய மாற்றங்கள்: ஏற்கனவே ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளும் இதில் அடங்கும்.
மதிப்பீட்டு முறை: தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் (Evaluation Criteria) வழங்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடவுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த இக்கட்டான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
English Summary
CBSE Cancels Class 12 Board Exams in Middle East Due to Regional Security Crisis