திருச்சி || இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பாலக்கரை கான்மியான் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி உமர் பாரூக்(53). இவர் இருசக்கர வாகனத்தில் மேலப்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென உமர் பாரூக் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கீழே விழுந்த உமர் பாரூக் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உமர் பாரூக் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worker killed in Twowheeler collitin Trichy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->