காதல் திருமணம்.. 2 மாதத்தில் தீப்பற்றி எரிந்த பெண்மணி.. நாடக காதல் கணவனால் அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் நயினார்பாளையம் பகுதியை சார்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). இவர் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதியில் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த நிலையில், இதே கல்லூரியில் பயின்று வந்த ஜீவா (வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

தங்களின் காதலை அலைபேசி மூலமாக பேசியும் வளர்த்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோர்களும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாது, காதலுக்கு பச்சை கொடி காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து ராஜேஸ்வரியும் - ஜீவாவிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஜீவாவிற்கு திடீரென பணத்தின் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காதல் மனைவியிடம் நகை மற்றும் பணம் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளான். 

இதனால் கணவன் - மனைவிக்கிடையே இருந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விட துவங்கியுள்ளது. தினமும் இவ்வாறாக வரதட்சணை சண்டை நடைபெற்று வந்த நிலையில், சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜீவா தனது காதல் மனைவியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார். 

உடல் முழுவதும் தீப்பற்றி உயிருக்கு போராடிய ராஜேஸ்வரியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்மணி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரியின் சகோதரர்களின் புகாரின் பெயரில் ஜீவாவை கைது செய்த காவல் துறையினர், கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viluppuram girl murder by love husband due to Dowry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->