தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து - வாலிபர் படுகாயம் - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாலிபர் படுகாயமடைந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாளையம்புதூர் சனிசந்தை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (38). இவர் தருமபுரியில் இருந்து நேற்று இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொட்டாவூர் வளைவு பகுதி அருகே திரும்பியபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து பெரியசாமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Twowheeler private bus accident in dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->