வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு! அவசர அவசரமாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஆணை!
TN CM Mk Stalin ordered, Govt give police honor to MS Swaminathan funeral
வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆணையில், "பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் திரு. சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை திரு. சுவாமிநாதன் அவர்கள் பெற்றுள்ளார்.
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய திரு. சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்" என்று மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
English Summary
TN CM Mk Stalin ordered, Govt give police honor to MS Swaminathan funeral