காதல் தகராறில் வாலிபர் அடித்து கொலை?.. திருப்பத்தூரில் பயங்கரம்..!
Tirupattur youngster Murder due to Love Problem police investigation about it
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை திரியாலத்தை சார்ந்தவர் ஆனந்த் பாபு (வயது 35). இவர் அங்குள்ள தாமலேரிபுத்தூர் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று இரவின் போது அலுவலகத்தை மூடிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.
இதன்போது திரியலாம் சாலையில் இவரை இடைமறித்த கும்பல், இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆனந்த பாபுவை, அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாது பலியாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், ஆனந்த் பாபு கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், அந்த மாணவியை மற்றொரு வாலிபரும் காதலித்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக ஆனந்த் பாபுவுக்கும், வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இந்த தகராறு காரணமாக கொலை அரங்கேறியிக்கலாம் என்று 3 வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் தொடர்பாக கொலை அரங்கேறியதா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupattur youngster Murder due to Love Problem police investigation about it