'போர் வேண்டாம்... பாலஸ்தீனத்தை விடுவிப்போம்'...! - ஆஸ்கார் விழாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக ஜாவியர் பார்டம் குரல்...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் 98-வது ஆஸ்கார் விருதுகள் விழாவில், உலக அமைதியை வலியுறுத்தி ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம் பேசியது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

இவ்விழாவைத் தொகுத்து வழங்கிய அவர், மேடையில் "போர் வேண்டாம் மற்றும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளிப்போம்" (NO TO WAR AND FREE PALESTINE) என்று முழங்கினார்.

அவரது இந்த உணர்ச்சிகரமான பேச்சுக்கு அங்கிருந்த திரையுலகப் பிரபலங்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்; அப்போது அவருடன் மேடையிலிருந்த நடிகை பிரியங்கா சோப்ராவும் புன்னகையுடன் அந்தப் பேச்சை வரவேற்றார்.

கடந்த 2024 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காசா மற்றும் ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வரும் தாக்குதல்களில் 70,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2025 அக்டோபர் மாதம் அமெரிக்காவின் தலையீட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், ஆஸ்கார் போன்ற உலகளாவிய மேடையில் ஒலித்த இந்த ஆதரவுக் குரல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NO TO WAR AND FREE PALESTINE Javier Bardem Raises His Voice Against Israeli Attacks Oscars


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->