நெஞ்சை பதறவைக்கும் வகையில், மனைவியை துடிதுடிக்க ராட்சசன் போல கொலை செய்த கொடூரன்.. திருவாரூரில் பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கற்கோவில் அருகேயுள்ள வெண்ணாற்று பகுதியில், கடந்த 16 ஆம் தேதி 35 வயது பெண் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் பிணமாக இருந்தபடி மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக நீடாமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்மணி மன்னார்குடி - மதுக்கூர் சாலையில் இருக்கும் மணிகண்டன் நகர் பகுதியை சார்ந்த அம்சகர்ணன் (வயது 46) என்பவரின் மனைவி சுதா (வயது 37) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுதாவை கொலை செய்தது யார்? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. 

விசாரணையில், சுதாவின் கணவர் அம்சகர்ணனின் மீது சந்தேகம் ஏற்ப்படவே, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அம்சகர்ணன் அளித்த வாக்குமூலத்தில், " மன்னார்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த அம்சகர்ணனுக்கு, 2 மனைவிகள் இருக்கின்றனர். முதல் மனைவியான சுதாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அம்சகர்ணன், பலமுறை இது குறித்து தகராறு செய்துள்ளார். 

சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டு, மனைவியை கடத்தலில் ஈடுபடுவது போல கை, கால்களை கயிற்றால் கட்டி மாமனாரின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு செல்லும் வழியிலேயே அங்குள்ள தண்ணீர் குன்னம் பகுதியில் சுதா மீண்டும் தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த அம்சகர்ணன், காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியை அடித்தே கொலை செய்துள்ளார். பின்னர் அவரின் உடலை சாக்குப்பையில் போட்டு வெண்ணாற்றில் வீசி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Wife Murder Police Investigation 21 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->