பெற்றோரை எதிர்த்து காதலனை கரம் பிடித்த 17 வயது சிறுமி., கர்பமானதால் பாதியில் விட்டு ஓடிய காதலன்..!!
The youth who married the girl was arrested by the police
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார்.இவருக்கும் சிந்தாமணி பகுதியை சேர்ந்த அசோக்குமார்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இவரும் நெருங்கி பழகி வந்ததை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி அந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். இருவரும் கடந்த ஆறு மாதமாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டது. அசோக் குமார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து, காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த அசோக்குமார் காவல்நிலையத்தி சரணடைந்தார்.இதனை அடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The youth who married the girl was arrested by the police