தஞ்சை: கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி! அதிர்ச்சி பின்னணி!
thanjai wife killed husband for liquor
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, ஓலைப்பாடி ஊராட்சி எருமைப்பட்டி கீழத்தெருவில் நடந்த ஒரு குடும்பக் கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் வசித்து வந்த கலியமூர்த்தி (45) மற்றும் சிந்தனைச் செல்வி (25) என்கிற ஜோடிக்கு, காதலாகத் தொடங்கி 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடைபெற்றுவருகிறது. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் — சுனிஷ்கா (9) மற்றும் சிவகார்த்திகேயன் (7) உள்ளனர்.
தொடர்ந்து குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுக் வந்த கலியமூர்த்தி, ஜூன் 22 ஆம் தேதி இரவு வழக்கம்போல் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கலியமூர்த்தி மனைவியை திட்டி தாக்கியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த சிந்தனைச் செல்வி சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, அவருடைய இடது கழுத்தில் குத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயம் தீவிரமாக இருப்பதால் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது தாயார் கமலம்பாள் (65) கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிந்தனைச் செல்வி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
thanjai wife killed husband for liquor