பள்ளியில் பதற்றமான ஆசிரியை - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


பள்ளியில் பதற்றமான ஆசிரியை - நொடியில் நடந்த விபரீதம்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் புனித தோமையார் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தத் பள்ளியில் அன்னாள் ஜெயமேரி என்பவர் ஆசிரியையாக பணியாற்றிய வந்தார். 

தற்போது, பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிற நிலையில், ஜெயமேரி மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எமிஸ்' எனும் கல்வித்துறை செயலியின் மூலமாக, காலாண்டு தேர்வை நடத்தி, அதில் விவரங்களைப் பதிவு செய்தார். 

இதையடுத்து ஜெயமேரி தேர்வு முடிந்தபின், செயலியில் தான் பதிவு செய்த விவரங்களை பார்த்துள்ளார். ஆனால், அந்த செயலியில் எதுவும் இல்லை. இதனால் பதற்றமடைந்த ஜெயமேரி,  இது தொடர்பாக மற்றொரு ஆசிரியையிடம் கேட்டுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஆசிரியர்கள் அவரை உடனடியாக மீட்டு புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆசிரியை ஜெயமேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

பள்ளியில், பதற்றம் அடைந்து ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பள்ளிக்கல்விதுறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

teacher died in trichy aalampakkam school


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->