சேலத்தில் பெரும் சோகம்! கீழே விழுந்த மூட்டை! உடல் கருகி பலியான தொழிலாளி! 3 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், அயோத்தி பட்டினம் அருகே பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பருத்திக்காடு பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று இயங்கி வந்த நிலையில், இன்று காலை இந்த குடோனில் வெடி மருந்து இறக்கி வைக்கும் போது ஒரு வெடி மருந்து மூட்டை கீழே விழுந்துள்ளது.

கீழே விழுந்த வேகத்தில் மூட்டையில் இருந்த வெடி மருந்து தீப்பற்றியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இந்த தீபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் வெடி மருந்து மூட்டை இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பட்டாசு குடோன் உரிய அனுமதி உடன் இயங்கி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Crackers fire Accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->