திருச்சி || கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் - புகாரால் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி​ || கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் - புகாரால் சிக்கிய அவலம்.!

திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டான்லி. இவர் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாணவியின் தாயார் ஒருவர் கல்லூரி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். 

ஆனால், கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது பெற்றோர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்ற பிறகு மாணவி வீடு திரும்பினார். இதையடுத்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் மாணவிக்கும், அவரது தாயாருக்கும், உதவி பேராசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்தது உண்மை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கல்வி நிர்வாகம் உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லியை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

professer arrested for harassment case in trichy sathiram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->