பெரம்பலூர்: தாயின் கழுத்தை நெரித்த கொடூரன்.. கதறிய பச்சிளம் குழந்தைகள்.. ஊசலாடும் உயிர்.!
Perambalur girl Murder Attempt Police Investigation
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் இருக்கும் வடக்கு மாதவி சாலை பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (வயது 30). இவர்கள் இருவருக்கும் சஸ்மிதா (வயது 10) மற்றும் அஷ் (வயது 8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராஜா வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று குழந்தைகளுடன் தனியாக இருந்த சம்பூரணத்திற்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஸ்ரீரங்கன் என்பவரின் மகன் ராஜா (வயது 19) என்பவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது.
தகராறு அதிகரித்து வாக்குவாதம் கைகலப்பாக மாற கூடிய நிலையில், அங்கிருந்த ஸ்கிப்பிங் கயிறை எடுத்த ராஜா சம்பூரணத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். பச்சிளம் குழந்தைகள் இருவரும் தாயை கண்டு கதறியளவே, கொடூரன் ராஜா கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றுள்ளான்.
தற்போது சம்பூரணம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பூரணத்தின் தாயார் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Perambalur girl Murder Attempt Police Investigation