கிரையான்ஸ் தின்ற 8 வயது சிறுமி பரிதாப பலி.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
Perambalur Child Death Police Investigation 16 December 2020
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 8). பிரியங்கா அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சம்பவ தினத்தன்று பிரியங்கா வீட்டில் விளையாண்டிக்கொண்டு இருந்த நிலையில், நோட்டு புத்தகங்களில் உள்ள ஓவியத்தை வர்ணமாக்க உதவும் கிரையான்ஸ் பென்சிலை தின்று மயங்கி இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், சிறுமிகள் பென்சில், குச்சி, சாக்பீஸ் போன்றவற்றை சாப்பிடுகிறீர்களா? என்பதை பெற்றோர்கள் கவனித்து கண்டிக்க வேண்டும் என்றும், பென்சில் தானே.. குச்சிதானே என்று அலட்சியமாக செயல்பட வேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Perambalur Child Death Police Investigation 16 December 2020