#நெல்லை | கஞ்சா வியாபாரிகளுடன் கைகோர்த்த போலீஸ் சஸ்பெண்ட்!  - Seithipunal
Seithipunal


கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பாளையங்கோட்டை காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை மாவட்டம்,பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் நவராஜ் கஞ்சா வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவரை சஸ்பெண்ட் செய்து, நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதுப்போல், வேலூர் மாவட்டம், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் 20 போலீசாரை கூண்டோடு மாற்றி எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு பதிலாக பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய 22 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமித்து உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

ஓராண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Police Navaraj Suspended


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->