பொள்ளாச்சியில் கொடூரம் | முட்புதரில் இறந்து கிடந்த இளம்பெண் -  குற்றவாளியை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் இளம்பெண் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் நாகவேணி மாடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரின் கணவர் ராஜேந்திரன் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். 

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், புதுப்பாளையம் பகுதியில் தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக நாகவேணி அழைத்து செல்வது வழக்கம். 

இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றும் மேய்ச்சலுக்காக மாடுகளை நாகவேணி அழைத்து சென்றுள்ளார். அன்று இரவு ஆகியும் நாகவேணி வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். 

புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ரத்த காயங்களுடன் நாகவேணி இறந்து கிடப்பதை உறவினர்கள் கண்டு அதிர்ச்சியடைந்னர்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகவேணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Near Pollachi Young Lady Mystery murder


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->