8 ஆயிரம் எக்ஸ் கணக்குகள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது. 

இந்த மோதல் தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதில் பெரும்பாலானவை போலி மற்றும் தவறான தகவல்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தவறான தகவல்கள் பரப்பும் 8 ஆயிரம் கணக்குகளை முடக்க எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி அந்த கணக்குகளை எக்ஸ் நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government order 8 thousand x accounts closed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->