மதிமுக அமைப்பு தேர்தல் | வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ போட்டியின்றி மீண்டும் தேர்வு! - Seithipunal
Seithipunal


மதிமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து உள்ளது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வாகியுள்ளார். 

வைகோவை தவிர வேறு யாருமே அப்பதவிக்கு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முதன்மைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட வைகோவின் மகன் துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

மேலும், மதிமுகவின் அவைத் தலைவராக ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளராக செந்திலதிபன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக மல்லை சி ஏ சத்யா, ஆகு மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரோஹையா சேக் முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக டாக்டர் சி கிருஷ்ணன், ராணி செல்வின், கே ஏ எம் நிஜாம், கழக குமார், ஜெய்சங்கர், மதுரை சுப்பையா, பூவை பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK Vaiko DuraiVaiko


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->