இயக்குநர் சுசீந்திரன் புகார்! சினிமா பாணியில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் காதலன் கடத்தல்! 5 பேர் கைது! - Seithipunal
Seithipunal


ஒரு காதலை முடிக்க வலியுறுத்தி சினிமா உதவி இயக்குநரை கடத்திய வழக்கில், வழக்கறிஞர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குநர் சுசீந்திரனின் அரும்பாக்கம் அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் ராஜகுமரன், கடந்த 29ம் தேதி அலுவலகத்திலிருந்து வெளியே சென்றுவிட்டு திரும்பவில்லை. இதையடுத்து, சுசீந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தேடல் நடத்தியனர்.

மே 30 அதிகாலையில் ராஜகுமரன் காவல் நிலையத்தில் ஆஜராகி, “ரசாக் கார்டனில் டீ குடிக்க சென்றபோது, கார் ஒன்று மோதியது; பின்னர் ஐந்து பேர் எனைக் கடத்தியது. ஓட்டும் காரிலேயே தாக்கினர், காதலை கைவிட வற்புறுத்தினர். பின்னர் கொலை மிரட்டலுடன் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பினர்” என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சிசிடிவி ஆதாரங்களை வைத்து, சந்திரசேகர், கார்த்திகேயன், லலித் ஆதித்யா, திவாகர், அகஸ்டின் ஆகிய ஐந்துபேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் ராஜகுமரனுக்கும் பெசன்ட் நகர் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணை காதலித்து வந்துள்ளனர். ஆனால், அந்த நிறுவன உரிமையாளர் அந்த பெண்ணிடம் காதலை சொல்ல, அவர் தான் ராஜகுமரனை காதலிப்பதாக தெரிவித்து பணியிலிருந்து நின்றுள்ளார்.

இதனையடுத்தே இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் குற்றத்துக்கு வழிகாட்டியதாக சந்தேகிக்கப்படும் நிறுவன உரிமையாளர் உட்பட மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love issue AD kidnaped


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->