நடிகைகளிடம் சில ஆண்கள் காட்டும் அணுகுமுறை! நடிகை நித்யா மெனன் கண்டிப்பு!
Actress nithya menan condemn to Man
நடிகை நித்யா மெனன், நடிகைகளிடம் சில ஆண்கள் காட்டும் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நித்யா, தமிழில் ‘காஞ்சனா 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற வெற்றிப்படங்களால் பாராட்டை பெற்றுள்ளார். மேலும்*‘குமாரி ஸ்ரீமதி’, ‘மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், ஒரு பேட்டியில் நித்யா கூறியதாவது: “நடிகைகள் பொதுவெளியில் வந்தால், சில ஆண்கள் அவர்களை தட்டிக் கேட்காமல் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார்கள்.
கை வைப்பது, அனுமதியில்லாமல் தொட்டுவிடுவது போன்ற அத்துமீறல்கள் நடக்கின்றன. இதே செயலை ஒரு சாதாரண பெண்ணிடம் செய்யத் துணிவார்களா? நடிகைகள் பொம்மைகள் இல்லை. பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான மரியாதைக்கு உரியவர்கள்” என தெரிவித்தார்.
English Summary
Actress nithya menan condemn to Man