நடிகைகளிடம் சில ஆண்கள் காட்டும் அணுகுமுறை! நடிகை நித்யா மெனன் கண்டிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகை நித்யா மெனன், நடிகைகளிடம் சில ஆண்கள் காட்டும் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நித்யா, தமிழில் ‘காஞ்சனா 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற வெற்றிப்படங்களால் பாராட்டை பெற்றுள்ளார். மேலும்*‘குமாரி ஸ்ரீமதி’, ‘மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள புதிய படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஒரு பேட்டியில் நித்யா கூறியதாவது: “நடிகைகள் பொதுவெளியில் வந்தால், சில ஆண்கள் அவர்களை தட்டிக் கேட்காமல் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார்கள்.

கை வைப்பது, அனுமதியில்லாமல் தொட்டுவிடுவது போன்ற அத்துமீறல்கள் நடக்கின்றன. இதே செயலை ஒரு சாதாரண பெண்ணிடம் செய்யத் துணிவார்களா? நடிகைகள் பொம்மைகள் இல்லை. பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியான மரியாதைக்கு உரியவர்கள்” என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress nithya menan condemn to Man


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->