லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.எஸ். அதிகாரியின் வீட்டில் சோதனை: சிக்கிய 25 வங்கி கணக்குகள், ரூ.1.கோடி, 3.5 கிலோ தங்கம்..!
5 bank accounts Rs 1 crore and 3kg gold seized in raid on IRS officers house
ஐ.ஆர்.எஸ்., அதிகாரி ஒருவர் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 02 கிலோ வெள்ளி பொருட்கள் சோதியில் சிக்கியுள்ளது.
புதுடில்லியில் உள்ள வரிசெலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக இருப்பவர் அமித்குமார் சிங்கால். மூத்த வருவாய் சேவை அதிகாரியான இவர், ரூ.25 லட்சம் லஞ்சம் பெற்றதாக டில்லியில் வசந்த்குஞ்ச் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன், லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஹர்ஷ் கோட்டக் என்ற நபரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். மொஹாலியில் உள்ள அமித்குமார் சிங்கால் இல்லத்தில் அவருக்கு பதிலாக லஞ்ச பணத்தை வாங்கிய போது ஐவரும் கைது செய்யப்பட்டார்.
2007-ஆம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான அமித்குமார் சிங்கால் கைது செய்யப்பட்டதை அடுத்து டில்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட பல நகரங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களது இல்லங்களிலும் சோதனையில் இறங்கினர்.

குறித்த சோதனையின் முடிவில் ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட்டுவதாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, அமித்குமார் சிங்காலுக்கு டில்லி, பஞ்சாப், மும்பை ஆகிய நகரங்களில் ஏராளமான சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகளில் 25 கணக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பீடு நடந்து வருகிறதுஎன்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
5 bank accounts Rs 1 crore and 3kg gold seized in raid on IRS officers house