இந்தியாவை துண்டாக்குவேன் என்ற தீவிரவாதி பாகிஸ்தானில் அநாதை பிணமாக கிடந்தார்! மர்ம மரணம் குறித்து விசாரணை! - Seithipunal
Seithipunal


“இந்தியாவை துண்டுதுண்டாக பிளந்து விடுவேன்” என மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாதி அப்துல் அஜிஸ், பாகிஸ்தானின் பஹவல்பூரில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள், அவரது மரணத்தையும், பஹவல்பூரில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கையும் உறுதி செய்துள்ளன.

இருப்பினும், பாகிஸ்தான் அரசு மற்றும் ஜெஇஎம் அமைப்பினர் இதுவரை எந்தத் தகவலையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

முன்னதாக மே 7ஆம் தேதி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழித்தது. இந்த தாக்குதலில், பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் முகாமும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்துல் அஜிஸ் மரணம் அந்த தாக்குதலுடன் தொடர்புடையதா? அல்லது உள்நோக்களால் நடந்த நிகழ்வா? என்பதை பாகிஸ்தான் விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs Pak Terrorist mystery death


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->