ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் கட்டுங்க - நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவத்திற்கு, சினிமா பைனான்சியராக உள்ள அன்புச்செழியனிடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார்.

இந்த கடனை, பின்னர் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் விசாலுக்குப் பதிலாக செலுத்தியது. ஆனால், அதை விஷால் திருப்பிச் செலுத்தவில்லை.

இது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, முழுத் தொகை மீட்கப்படும் வரை விஷால் படங்களின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதாக கூறி, பணம் திருப்பி தரக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor Vishal Chennai HC Order


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->