ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் கட்டுங்க - நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
actor Vishal Chennai HC Order
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவத்திற்கு, சினிமா பைனான்சியராக உள்ள அன்புச்செழியனிடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார்.
இந்த கடனை, பின்னர் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் விசாலுக்குப் பதிலாக செலுத்தியது. ஆனால், அதை விஷால் திருப்பிச் செலுத்தவில்லை.
இது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, முழுத் தொகை மீட்கப்படும் வரை விஷால் படங்களின் அனைத்து உரிமைகளும் லைகா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதாக கூறி, பணம் திருப்பி தரக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், விஷால் ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
English Summary
actor Vishal Chennai HC Order