டிஜிட்டல் கைது; அதிகாரி என நாடகமாடி பெண்ணிடம் ரூ.2.89 கோடி பறிப்பு !
Digital arrest an officer masquerading as a woman steals 2.89 crore rupees
டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம் என்று கூறி டிராய் அதிகாரி என நாடகமாடி பெண்ணிடம் ரூ.2.89 கோடி பணமோசடி செய்த மர்ம நபர்களை சைபர் போலீசார் தேடிவருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பை நகரில் வில்லே பார்லே பகுதியில் வசித்து வரும் 73 வயது பெண்ணிடம் சைபர் குற்றவாளிகள் சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்.அப்போது அவர்கள் தங்களை இந்திய தொலைதொடர்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதி என அடையாளம் காட்டி பணமோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது வாட்ஸ்அப் வழியே தொலைபேசியில் பேசிய அந்த மர்ம நபர், அந்த பெண்ணிடம் நீங்கள் முறையற்ற பணபரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள் என கூறியும் . மோசடி வழக்கில் விசாரணையில் சிக்கிய தொழிலதிபருடன் உங்களுக்கு தொடர்பு உள்ளது என கூறியும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உங்களை டிஜிட்டல் கைது செய்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தொடர்ந்து, உங்களை கைது செய்வதில் இருந்து தவிர்க்க, நீதிபதி ஒருவர் உதவுவார் என வீடியோ காலில் அந்நபர் கூறிதை நம்பிய அந்த பெண்ணை ரூ.2.89 கோடி பணபரிமாற்றம் செய்ய வைத்திருக்கிறார்.
இதையடுத்து மோசடியில் சிக்கி இருக்கிறோம் என உணர்ந்த அந்த பெண் சைபர் போலீசாரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறியிருக்கிறார்.உடனடியாக இதுபற்றி வழக்கு பதிவு செய்த சைபர் போலீசார் துரித கதியில் விசாரணை மேற்கொண்டு, ரூ.2.89 கோடியில் ரூ.1.29 கோடியை மீட்டுள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
English Summary
Digital arrest an officer masquerading as a woman steals 2.89 crore rupees