சர்ச்சை வீடியோ விவகாரம்; ஒருவழியாக பனோலிக்கு கிடைத்தது இடைக்கால ஜாமீன்! - Seithipunal
Seithipunal


பனோலிக்கு, நீதிபதி ராஜா பாசு சவுத்ரி தலைமையிலான அமர்வு, ரூ.10 ஆயிரம் பிணை தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். 

புனே சட்ட பல்கலைக்கழக 4-ம் ஆண்டு மாணவியான அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்த ஷர்மிஷ்டா பனோலி ,சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்று படு வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட்டை சேர்ந்த முஸ்லிம் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்தது சர்ச்சையானது. 

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்தது.  இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன்  மன்னிப்பும் கோரினார்.கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு  பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து குடும்பத்துடன் தலைமறைவான அவரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், அவருடைய இடைக்கால ஜாமீன் பற்றி கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.

அப்போது பனோலிக்கு, நீதிபதி ராஜா பாசு சவுத்ரி தலைமையிலான அமர்வு, ரூ.10 ஆயிரம் பிணை தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். மேலும் பனோலிக்கு எதிரான புகாரில் எந்தவித குற்றத்திற்கான விசயங்களும் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.

மேலும்  கல்வி நோக்கத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டும் என அணுகினால் அதுபற்றி கோர்ட்டு பரிசீலிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பனோலிக்கு மிரட்டல்கள் வந்துள்ள சூழலில், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversial video issue the interim bail was granted to Panolik in one way


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->