மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு? கமலுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியதாக கமல்ஹாசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகத்தில் அவரது *தக் லைஃப்* திரைப்பட வெளியீடு ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தாலும், கமல் நேரடியாக மன்னிக்காமல் இருப்பது காரணமாக படத்தின் வெளியீடு சிக்கலாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு வார அவகாசம் கோரியது. அதற்கு பதிலளித்த நீதிபதி நாக பிரசன்னா, “நாங்கள் மன்னிப்புக் கோரவில்லை; மன்னிப்பைக் கோருவது கர்நாடக ஃபிலிம் சேம்பர்தான்” என்றார்.

இந்நிலையில், கர்நாடக திரையரங்குகளில் தக் லைஃப் வெளியீடு ஒரு வாரம் தள்ளிவைக்கப்படும் என பட தயாரிப்பு தரப்பு அறிவித்தது. திரைப்பட வெளியீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இன்று பிற்பகலில் விசாரணை நடந்தது.

அதில் கமல் எழுதிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; அதற்காக வருத்தப்படுகிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கும் பதிலளித்த நீதிமன்றம், “மன்னிப்புக் கேட்பதில் என்ன தவறு? ஏன் நேரடியாக சொல்லாமல் வளைத்துப் பேசுகிறீர்கள்?” என கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், கமல் தரப்பு, கர்நாடக ஃபிலிம் சேம்பருடன் நேரில் பேசி தீர்வு காணுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thug Life Kamal movie kannadam HC


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->