நாளை நடைபெறவுள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..? - Seithipunal
Seithipunal


உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ .பி.எல் போட்டியின் 18-வது தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. நாளையுடன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடையவுள்ளது. 

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 07.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  18 ஆண்டுகளுக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அந்த கனவு கோப்பைக்கான பல பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது.

குறிப்பாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 02 ஆட்டம் மழை காரணமாக 02.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow IPL final likely to be affected by rain


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->