வேலூரில் அதிர்ச்சி: செல்போனில் அதிகநேரம் பேசியதை கண்டித்த கணவர்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


வேலூர் தொரப்பாடி கே.கே.நகரைச் சேர்ந்தவர் 33 வயதான எலக்ட்ரீசியன் விநாயகம். இவருடைய மனைவி ஷோபனாவுக்கு  29 வயது. இருவரும்  கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளான். இந்நிலையில், மனைவி ஷோபனா செல்போனில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிக நேரம் பேசிவதை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கணவன்,மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு ஷோபனா வெகுநேரமாக செல்போனில் பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் மனைவியை கண்டித்த விநாயகம், 'நாளை காலை உன்னுடைய பெற்றோரை வீட்டிற்கு வரச்சொல். அவர்களிடம் நான் பேச வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளனர்.

நேற்று காலை விடிந்ததும் 05 மணிக்கு ஷோபனா எழுந்து வீட்டின் வாசலில் கோலம் போட்டுவிட்டு, 05.30 மணியளவில் விநாயகம் தூங்கி கொண்டிருந்த படுக்கையறையின் கதவை அவர் வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். அறையின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்டு விநாயகம் எழுந்து உடனடியாக கதவை திறக்கும்படி கூறியதோடு, கதவை தட்டியம் பார்த்துள்ளார். ஆனால் கதவை சோபனா திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்தபோது ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் ஷோபனா தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விநாயகம் உடனடியாக செல்போன் மூலம் அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து தூக்கில் தொங்கிய ஷோபனாவை கீழே இறக்கியுள்ளனர். பின்னர் படுக்கை அறைக்கதவை திறந்து விட்டுள்ளனர்.

கணவர் விநாயகம் வெளியே வந்து பார்த்தபோது ஷோபனா இறந்துவிட்டார். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்,  இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்று ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகம் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். திருமணமாகி 5½  ஆண்டுகளில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young woman commits suicide after husband criticizes her for talking on cell phone for too long in Vellore


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->