மதுரை வரலாறு அப்படி! தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட திமுக - பயமுறுத்தும் செல்லூர் ராஜூ!
ADMK Sellur raju DMK MK Stalin madurai General Meeting
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "முதல்வர் வருகைக்காக மதுரையில் மூன்று மணி நேர போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டாலும், அவரை காண மக்கள் வரவில்லை.
நடந்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். மக்களின் ஆதரவு இருந்தால், அந்த ரோடு-ஷோ ஒரு திருவிழாவாக மாறியிருக்கும். ஆனால், நிகழ்ச்சிக்கு கூட்டம் செயற்கையாக ஏற்பாடு செய்யப்பட்டது. தானாக வந்த மக்கள் கூட்டமல்ல.
அமைச்சர் மூர்த்தி சொல்வது போல் 10 தொகுதியில் வெற்றி பெற முடியாது. மக்களுக்கான திட்டங்களைச் சொல்லட்டும்; அவற்றைப் பற்றி பொதுவெளியில் விவாதிக்கத் தயார். முதல்வர் சென்னை கூவம் கால்வாயை பார்த்திருக்கலாமே. ஆனால் மதுரையில் சொகுசு கார் செல்லவேண்டும் என்பதற்காக மட்டும் சாலை தரப்பட்டது. பொதுமக்கள் நடக்க வேண்டிய சாலைகள் குழியால் நிறைந்திருக்கின்றன.
மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தும் ஒவ்வொரு முறையும், அதன் பிறகு 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது வரலாறு.
1977ல் நடந்த கூட்டத்துக்கு பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி வந்தது. இந்த முறை கூட பொதுக்குழு மூலம் தி.மு.க. தானே சூனியம் வைத்துக் கொண்டதாகத் தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK Sellur raju DMK MK Stalin madurai General Meeting