அரசு பேருந்தை முந்த முயற்சித்து, வாழ்க்கையை இழந்த வாலிபர்.. வேலூரில் பெரும் சோகம்.!!
in vellore man accident police investigation
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் அரங்கேறி மக்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் உள்ளாகி வருகின்றனர். மேலும்., சில விபத்துகள் கவனக்குறைவின் காரணமாக ஏற்பட்டும் வருகிறது.
வேலூரில் முன்னாள் சென்ற அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தை முந்த முயன்று வாலிபர், எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி படுகாயமடைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
வேலூர், காட்பாடியிலிருந்து தொரப்பாடி வழியாக பாகாயம் செல்லும் டிஆர் என்ற பேருந்து வேலூர் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அணுகு சாலை வழியாக வந்துள்ளது. அப்போது எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அரசு பேருந்தை பின்தொடர்ந்து ஜியாதுல்லா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அரசு பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி கீழே வந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காயமடைந்த ஜியாதுல்லாவை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ஜியாதுல்லா தலைகவசம் அணியாமல் வந்ததால் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது..
Tamil online news Today News in Tamil
English Summary
in vellore man accident police investigation