நெல்லையில் பயங்கரம்.! பேரன், பேத்திக்கு விழுந்த அரிவாள் வெட்டால் அதிர்ச்சியில் தாத்தா உயிரிழப்பு.!!
Grandfather died in shock after being cut by a sickle fell on grandson and granddaughter
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து 12ம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவனை வெட்ட முயன்ற போது தடுக்க முயன்ற அவருடைய தங்கையையும் மர்ம கும்ப கும்பல் வெட்டியதை கண்ட அதிர்ச்சியில் அவர்களுடைய தாத்தா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரியை சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னதுரை வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த சின்னதுரையை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சேர்ந்து அறிவாலால் வெட்டியது.
அவர்களை தடுக்க முயன்ற சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வையையும் கையில் வெட்டிவிட்டு மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அவர்களை மீட்ட உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனது பேரனையும், பேத்தியையும் கண் முன்னே வெட்டியதை கண்டு அதிர்ச்சியிலிருந்த அவர்களுடைய தாத்தா கிருஷ்ணன் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில் சின்னதுரை பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பதால் சில மாணவர்கள் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளனர்.

இதனால் சின்னதுரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பள்ளி முடித்து வீடு திரும்பிய சின்னதுரையிடம் மீண்டும் சில மாணவர்கள் வம்பு இழுத்துள்ளனர்.
இந்த நிலையில் தான் வீட்டிலிருந்த சின்னதுரையை 3 பேர் கொண்ட கும்பல் அறிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தகராறு ஈடுபட்ட மாணவர்கள் வீடு புகுந்து வெட்டினார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Grandfather died in shock after being cut by a sickle fell on grandson and granddaughter