போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ரத்த பரிசோதனையில் உண்மை உறுதி! - Seithipunal
Seithipunal


திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக முதலில் பிரதீப் என்ற நபர், நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் மூலம் கிடைத்ததோடு, திரையுலகை சேர்ந்த பலரும் இதன் உபயோகத்துடன் தொடர்புடையதாக கூறியுள்ளார்.

பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், அவரது ரத்த மாதிரிகள் பெறப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதுதான் உறுதி செய்யப்பட்டது.

மேலும், ஸ்ரீகாந்த், பிரசாத்திடம் இருந்து ஒரு கிராம் போதைப்பொருளை ரூ.12,000-க்கு வாங்கி 40 முறை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ரூ.72,000 ஆன்லைன் பரிமாற்ற ஆதாரங்களும் போலீசாரிடம் உள்ளது.

இதனையடுத்து, ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பிரகடனமான இந்த விவகாரத்தில், மற்ற நடிகர்களிடம் விசாரணை விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug use Actor Sri kanth arrested


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->