திண்டுக்கல்: வயிற்று வலியால் துடித்த சிறுமி.. மாத்திரை வாங்க பணமில்லாமல் தவித்த பெற்றோர்.. அரங்கேறிய பெரும் சோகம்.! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் வயிற்று வலிக்கு பெற்றோர்கள் மாத்திரை வாங்கிக்கொடுக்க வழியில்லாத காரணத்தால், சிறுமி தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை பகுதியை சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சசிகலா. இவர்கள் இருவரும் அங்குள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருக்கிறார். 

13 வயதாகும் ஐஸ்வர்யா அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமிக்கு இன்று மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான வயிற்று வலி ஏற்படவே, வலியால் துடித்த சிறுமி தாயிடம் வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டுள்ளார். 

தாயிடம் அப்போது காசு இல்லாததால், வேலைக்கு சென்றுவிட்டு மாலை வருகையில் மாத்திரை வாங்கி வருவதாக கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியால் வயிற்று வலியை பொறுக்க முடியவில்லை. 

இதனால் கடுமையான மனத்துயருக்கு உள்ளாகிய சிறுமி, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவரது உடலைக்கண்டு கதறியழுத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Guziliamparai girl Iswarya suicide due to Periods Pain


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->