#தர்மபுரி | காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நாடக காதலன்!
Dharmapuri Drama love Munniyappan
தர்மபுரி அருகே காதலிக்க மறுத்த 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நாடக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி,
தர்மபுரியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.
பெரிய குறும்பட்டியைச் சேர்ந்த கணேசன் (28 வயது) மாணவி பள்ளிக்கு சென்று வரும்போது எல்லாம், தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
ஆனால் பள்ளி மாணவி முனியப்பனை காதலிக்க மறுத்து, அவரை திட்டியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவி தனியாக நடந்த சென்றபோது, முனியப்பன் மாணவியை பின்தொடர்ந்து, அவரை கடத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் அழுதப்படியே தெரிவிக்கவே, உடனடியாக மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் நாடகக் காதலன் கணேசன் என்கின்ற முனியப்பனை வலை வீசி தேடி வருகின்றனர்.
English Summary
Dharmapuri Drama love Munniyappan