கடலூர் | கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த அரசு மருத்துவர்களின் அலட்சியம்! தற்கொலை போராட்டத்தில் இறங்கிய குடும்பம்! - Seithipunal
Seithipunal


கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கோரி, பெண்ணின் குடும்பத்தினர் பெட்ரோல் கேனுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி பத்மாவதி கடந்த 2022 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கடலூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பிறப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தெரிய வருகிறது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பத்மாவதியின் குடலையும், கர்ப்ப பையையும் ஒன்றாக சேர்த்து வைத்து தைத்ததாகவிட்டதாகவும், அதனால் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் பல புகார் மனுக்களை கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், இன்று கடலூர் அரசு அரசு மருத்துவமனைக்கு வந்த பத்மாவதி மற்றும் அதன் குடும்பத்தார், "எங்களது உடல் உறுப்புகளை தானமாக பெற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் தற்கொலை செய்து இங்கேயே உயிரை விடுகிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நட த்தி நடத்தி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Govt Hospital Worst Treatemnt issue june


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->