#சிதம்பரம் || ஆட்டுக்கல்லை போட்டு கள்ளகாதலியை கொலை செய்த கொடூரன்.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே பெண் துப்புரவு பணியாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சீதா. 45 வயதாகும் இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

சம்பவம் நடந்த கடந்த 13ஆம் தேதி காலையில் சீதா அவரின் வீட்டில் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடக்கவே, அவரின் மகள் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட சீதாவின் பக்கத்து வீட்டுக்காரர் குமார் (48 வயது) மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நடந்த உண்மைகள் வெளியே வந்தது. அதன்படி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இல்லாத சீதாவிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட குமார். கள்ளக்காதல் உறவில் இருந்து வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இரவு சீதாவின் வீட்டிற்கு சென்ற குமார், அவரை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். அதற்கு சீதா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த குமார் அருகில் இருந்த குழவிக் கல்லை எடுத்து அவரது தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார் என்று, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram keezh manakudi lady murder case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->