#திடீர்திருப்பம் | வெளியான தீர்ப்பு! ஓபிஎஸ் எடுத்த அதிரடியால் அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை விசாரணை!
AIADMK case judgement ops next move 28march2023
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பில், அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் ஆதரவாதர்களின் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் மேல்முறையீடு செய்துள்ளார்

ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ள இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபிக் அமர்வுமுன் நாளை விசாரணை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK case judgement ops next move 28march2023