சென்னையில் நாளை 1,641 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்; 6,564 பேர் பணியில் ஈடுப்படவுள்ளனர்..! - Seithipunal
Seithipunal


நாடு முழு​வதும் தீவிர கூடு​தல் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஜூன் 28) நடை​பெறுகிறது. அதனபடி, நாளை பொது​மக்​கள் தங்​கள் வீட்​டின் அரு​கில் உள்ள சொட்டு மருந்து மையத்​துக்​குச் சென்​று, தங்களது குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து போட்​டுக்​கொள்​ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகரில் 05 வயதுக்கு உட்​பட்ட சுமார் 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 1,641 சொட்டு மருந்து மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதற்காக மாநக​ராட்சி நகர சமு​தாய நல்​வாழ்வு மையங்​கள், நகர ஆரம்ப சுகா​தார மையங்​கள், அரசு மருத்​து​வ​மனை​கள், பள்​ளி​கள், சத்​துணவு மையங்​கள், தனி​யார் மருத்​து​வ​மனை​கள், ரயில் நிலை​யங்​கள், பேருந்து நிலை​யங்​கள், மக்​கள் அதி​கம் கூடும் மெரினா கடற்​கரை, கோயம்​பேடு புறநகர் பேருந்து நிலை​யங்​கள் உள்​ளிட்​ட​வற்​றில் போலியோ சொட்டு மருந்து மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

குறித்த ​மு​காம்​கள் நாளா காலை 07 மணிக்கு தொடங்​கி மாலை 05 மணிவரை இயங்கவுள்ளது. இப்​பணி​யில் சுமார் 6,564 பேர் ஈடு​படுத்​தப்படவுள்​ளனர்.

இதற்​காக பால​வாக்​கம் அரசு ஆதி​தி​ரா​விடர் நல உயர்​நிலைப் பள்​ளி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னேற்​பாடு​களை, மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் நேரில் ஆய்​வு செய்​து, ஆலோ​சனை​களை வழங்​கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Polio vaccination camps to be held at 1641 locations in Chennai tomorrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->