சென்னையில் 40 கிராம் கவரிங் நகை மற்றும் செல்போனை திருடிய இருவர் கைது..! - Seithipunal
Seithipunal


சென்னை, அசோக் நகர் இந்​திரா காலனி 04-வது அவென்​யூவைச் சேர்ந்​தவர் பிரபு சீனி​வாஸ் (53). இவரது வீட்​டில் புனரமைப்பு பணி​கள் நடை​பெற்று வந்​த​தால், அவர் அண்ணா நகரில் உள்ள தனது பெரியப்பா வீட்​டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி மாலை புனரமைப்பு பணி​களை முடித்து தொழிலா​ளர்​கள் சென்றுள்ளனர். மறு​நாள் காலை மீண்​டும் பணிக்கு வந்த தொழிலா​ளர்​கள் வீட்டை திறந்து பார்த்​துள்ளனர். அப்போது பீரோ​வில் இருந்த சுமார் 40 கிராம் எடை​யுள்ள கவரிங் ஆரம், செல்​போன் மற்​றும் வீட்​டில் பொருத்​தப்​பட்​டிருந்த 06 பித்​தளை பைப்​பு​கள், குழாய்​கள் ஆகியவை மர்ம நபர்​களால் திருடி சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து பிரபு சீனி​வாஸ் குமரன் நகர் காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் புகார் அளித்த நிலையில், போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர்.அதன்படி இந்த திருட்​டில் வடபழனி ஒத்​த​வாடை தெரு​வைச் சேர்ந்த கார்த்​தி​கேயன் (20), எம்​.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சதீஸ் குமார் (20) ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் விசா​ரணை​விசாரணையில் இவர்கள் இரு​வரும் வீட்​டின் பின்​வாசல் வழி​யாக நள்​ளிர​வில் உள்ளே புகுந்து தங்க நகை என நினைத்து கவரிங் நகையை திருடியுள்ளதும், போகும்​போது செல்​போன் மற்​றும் பித்​தளை பைப்​பு​களை திருடிச் சென்றுள்ளனர். தற்போது இரு​வரும் சிறை​யில்​ அடைக்​கப்​பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two arrested for stealing 40 grams of covering jewelry and a cell phone in Chennai


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->