அதிமுக புள்ளியின் கோடிக்கணக்கான ₹2000 நோட்டுகள்.!! ₹10 லட்சத்திற்கு ₹13 லட்சம் தருவதாக மோசடி.!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ராமியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ட்ராவல்ஸ் தொழில் நடத்தி வரும் சுரேஷ் என்பவரிடம் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், செல்வகுமார், ஹரிபாபு ஆகிய நான்கு பேர் அதிமுக முன்னாள் அமைச்சரின் பணம் கோடிக்கணக்கில் ₹2000 நோட்டுகளாக இருப்பதாக கூறி உள்ளனர்.

அந்தப் பணத்தினை தாங்கள் ₹500 நோட்டுகளாக மாற்றி வருவதாகவும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ₹500 நோட்டுகளுக்கு, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான ₹2000  பணம் தருவதாக கூறி நம்ப வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சுரேஷ் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு காகிதத்தை பண்டலாக ஒரு பையில் கொடுத்துள்ளனர். 

இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் போலி பண கட்டுகளுடன் கைது செய்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெயரில் ₹2000 நோட்டுகள் மாற்றுவதாக கூறி மோசடி செய்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK exminister name used Rs2000 rupees notes exchanging fraud in dharmapuri


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->