எடப்பாடி பழனிச்சாமி வழக்கில் இன்று தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அல்லது தீர்ப்பை அளிக்க உள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் சுமார் 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், இது குறித்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தும், மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார். அதில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு சம்மரிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என்பதை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி மீது புதிய விசாரணை தொடங்குமா? அல்லது ஏற்கனவே ஆரம்ப கட்ட விசாரணையின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றமில்லை என்ற வாதத்தை ஏற்று வழக்கை நீதிபதி முடித்து வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Case Chennai HC judgement today 18072023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->