மூத்த குணச்சித்திர நடிகை பெருமாயி காலமானார்!
Actress perumayi death
மதுரை: உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டி பூர்வீகமான பெருமாயி, 73 வயதில் இன்று உடல்நகுறைவால் காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு தொடர் மூலம் திரைத்துறையில் புகழ் பெற்றவர். பின்னர் வில்லு, மனம் கொத்தி பறவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் திரைப்படங்களில் அதிகம் பங்கேற்க முடியாமல் இருந்தார்.
இந்நிலையில், இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் இழந்துள்ளார். அவருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். அவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.